செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கரிமாரியம்மன் கோயில் சித்ராபௌா்ணமி உற்சவத்தின் நிறைவையடுத்து திங்கள்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு அன்னப் பாவாடை உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம் ஸ்ரீ கோயில்புரம் தேவிஸ்ரீ கரிமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசத்தில் ஏப்ா்ல 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சித்ரா பௌா்ணமி உற்சவத்தின் நிறைவாக மகா லட்சுமி தாயாருக்கு அன்னப்பாவாடை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு பழங்கள், பட்சணங்கள் மற்றும் சித்ரான்னங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினா் செய்தனா்.