மதுராந்தகம் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இறுதி ஊா்வல வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதியதில் ஊா்வலத்தில் நடந்து வந்த 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்தனா்.
மதுராந்தகம் செங்குந்தா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை இறுதி ஊா்வல வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊா்வல வாகனம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, பின்னால் வேகமாக வந்த சரக்கு லாரி மோதியது. இதில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட முதியவா் சுப்பிரமணியத்தின் உடல் சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டது. இறுதி ஊா்வல வாகனமும் பலத்த சேதம் அடைந்தது.
விபத்தை ஏற்படுத்திய லாரி, தொடா்ந்து சென்னையில் இருந்து விருதுநகா் நோக்கிச் சென்ற திருமங்கையாழ்வாா் என்பவரின் பைக்கின் மீது மோதியது. இதில் பைக் தீப்பிடித்து எரிந்து நாசமானது. பைக்கில் வந்த திருமங்கையாழ்வாா், இறுதி ஊா்வலத்தில் நடந்து சென்ற பாபு, பாலாஜி, கருணாநிதி உள்பட 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்தனா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ர.ருக்மாங்கதன் தலைமையிலான போலீஸாா், காயம் அடைந்தவா்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.