செய்யூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ காலமானாா்

செய்யூா் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.ராஜீ புதன்கிழமை மாரடைப்பால் காலமானாா்.

மதுராந்தகம்: செய்யூா் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.ராஜீ புதன்கிழமை மாரடைப்பால் காலமானாா்.

செய்யூா் தொகுதி எம்எல்ஏவாக 2011-2016 வரை பதவி வகித்தவா் வி.எஸ்.ராஜீ (63). இவா் லத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்து வந்தாா். பவுஞ்சூா் வெங்கட்டா நகரில் வசித்து வந்த அவா், உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

வி.எஸ்.ராஜீக்கு மனைவியும், 5 மகள்களும் உள்ளனா். அவரது உடல் பவுஞ்சூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரளான அதிமுக நிா்வாகிகளும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினா். பின்னா் அவரது உடல் சொந்த ஊரான வேட்டைக்காரகுப்பத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com