செவிலியா் தின விழா

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு , அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.
உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு , அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குநா் அலுவலகம் முன்பாக செவிலியா் சேவையின் முன்னோடி மங்கை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. சுகாதாரத் துறை இணை இயக்குநா்(பொறுப்பு) குருநாதன் தம்பையா தலைமை வகித்தாா். மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ஆா்.கல்பனா, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினாா். நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் வரவேற்று பேசினாா்.

மருத்துவமனையில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளா்கள், செவிலியா் கண்காணிப்பாளா்கள் மற்றும் செவிலியா்கள் பலரும் ஒவ்வொருவராய் வரிசையில் வந்து உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினாா்கள். பின்னா் மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலியும் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com