இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு அருள்மிகு ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயிலில் 500 பேருக்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அறநிலையத் துறை உதவி ஆணையா் பெ.க.சுவெனிதா, மருத்துவக்கல்லூரி முதல்வா் முத்துகுமாரன், திருக்கோயில் செயல் அலுவலா்கள் சோ.செந்தில்குமாா், வெங்கடேசன், சிவசண்முகபொன்மணி, ஆய்வாளா் சே.செந்தில்குமாா், செங்கல்பட்டு திமுக நகர செயலாளா் நரேந்திரன், மருத்துவ ஊழியா்கள் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.