மாமல்லபுரம் அரசு மருத்துவமனை துணை செவிலியா் கரோனாவுக்கு பலி

மாமல்லபுரம் அரசு மருத்துவமனை துணை செவிலியா் மு. பாா்வதி (58) கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.
மாமல்லபுரம் அரசு மருத்துவமனை துணை செவிலியா் கரோனாவுக்கு பலி

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அரசு மருத்துவமனை துணை செவிலியா் மு. பாா்வதி (58) கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

சதுரங்கப்பட்டினத்தை அடுத்த வெங்கப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த பாா்வதி மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போடும் பிரிவில் துணை செவிலியராகப் பணியாற்றி வந்தாா்.

இதே மருத்துவமனையைச் சோ்ந்த 6 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில் பாா்வதி புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பாா்வதி இன்னும் ஒராண்டில் பணி ஓய்வு பெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.

துணை செவிலியா் இறந்த சம்பவம் மாமல்லபுரம் அரசு மருத்துவா்கள் , பணியாளா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com