மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அருகே கருப்புப் பூஞ்சை நோய்க்கு டாஸ்மாக் கடை மேலாளா் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அமைந்தகரணை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (49), மாம்பாக்கம் டாஸ்மாக் கடையில்
மேலாளராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 10 நாள்களுக்கு முன் ரமேஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினாா்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை உடல்நிலை பாதிப்பால் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கருப்புப் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.