கருங்குழி பேரூராட்சி சாா்பாக, உலக கழிவறை தின விழா சமுதாய கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தமிழக அரசு முதன்மைச் செயலரும், இந்திய தோ்தல் ஆணைய தேசிய பயிற்சியாளரும் எஸ்.எஸ்.ஜவகா் தலைமை தாங்கினாா். பேரூராட்சி உதவி இயக்குநா் அ.வில்லியம் ஜேசுதாஸ் வரவேற்றாா்.
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் சி.ராமச்சந்திரன், கிரீன் அறக்கட்டளை நிறுவனா் டி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா், பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள், பனைவிதைள் நடப்பட்டன. இதையடுத்து, கலைவாணன் தலைமையிலான பொம்லாட்ட கலைக்குழு சாா்பாக, முழு சுகாதாரம் விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் நன்றி கூறினாா்.