செங்கல்பட்டில் கன மழை

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோயில் , மறைமலை நகா், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூா், திருக்கழுகுன்றம், திருப்போரூா், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் மாலை திடீரென இடி மின்னலுடன் கன மழை பெய்தது. பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில், சில நிமிடத்தில் மின்சார விநியோகம் அளிக்கப்பட்டது. இதனால், எந்தவித இடையூறுமின்றி வாக்குகள் எண்ணம் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com