சாக்லெட் என நினைத்து மாத்திரை தின்ற குழந்தை பலி

மதுராந்தகம் அருகே சாக்லெட் என நினைத்து தவறுதலாக வயிற்றுவலி மாத்திரையைத் தின்ற 2 வயது ஆண் குழந்தை புதன்கிழமை இறந்தது.

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சாக்லெட் என நினைத்து தவறுதலாக வயிற்றுவலி மாத்திரையைத் தின்ற 2 வயது ஆண் குழந்தை புதன்கிழமை இறந்தது.

தோட்டநாவல் கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக். இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு 2 குழந்தைகள். 2-ஆவது ஆண் குழந்தை லித்வின்(2) கடந்த 3-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, சாக்லெட் என நினைத்து மேஜையில் இருந்த வயிற்று வலி மாத்திரையைத் தின்றுள்ளது. வாந்தியுடன் மயக்கமடைந்த குழந்தை லித்வினை மதுராந்தகம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி, புதன்கிழமை இரவு குழந்தை லித்வின் உயிரிழந்தது. இது குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ர.ருக்மாங்கதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com