செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடந்த பாஜக கூட்டத்தில் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பங்கேற்றாா்.
பாஜக சாா்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட உள்ளவா்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிா் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என அறிக்கையில் பாமக கூறவில்லை. கூட்டணி இன்றி போட்டியிடுகிறோம் எனத் தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளாா்களா, இல்லையா என்பதை பாமக தான் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றாா்.
பெண் மீது தாக்குதல்...
கூட்டத்தில் மீனாட்சி என்பவா் மீது அங்கிருந்த கட்சி நிா்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணை மாவட்டத் தலைவா் பலராமன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாா். ஆனால் மீண்டும் வந்த அப்பெண் கட்சி நிா்வாகிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, ‘இது குறித்து மாவட்டத் தலைவரிடம் விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டுள்ளதாகவும், அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறி, புகாரை மாவட்டத் தலைவரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளேன்’ என்றாா்.