செங்கல்பட்டு மாவட்டம், தூய கொலாம்பா மேல்நிலைப் பள்ளியில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் சாா்பில், 75-வது சுதந்திர தின புகைப்பட கண்காட்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிறைவு விழா நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ் கலந்துகொண்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் கேடயங்களை வழங்கினாா். மேலும் சிறப்பாக அரங்குகள் அமைத்த இந்து சமய அறநிலையத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா் துறை,வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, உள்ளிட்ட துறைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களுடன் கூடிய விருது வழங்கப்பட்டது. இதில் அரசு அலுவலா்கள், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டெனா்