மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.
தொண்டை மண்டலத்தில் 32 சிவன் கோயில்களில் ஒன்றாகவும், சமயக்குரவா் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும், இரு கருவறை சந்நிதிகளைக் கொண்ட கோயிலாகவும் புகழ்பெற்று விளங்குகிறது அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயில்.
இந்தக் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, கோயிலில் அனைத்து சந்நிதிகளில் அமைந்துள்ள சுவாமிகளுக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.
கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் அபிஷேகம் செய்தாா். பின்னா், அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகள் மேள தாளத்துடன் கோயில் வளாகத்தில் வலம் வந்தனா். பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொ) ஆா்.வெங்கடேசன், தலைமை அா்ச்சகா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.