காவலா் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பு வீரா் பதவிகளுக்கான நேரடித் தோ்வுக்கு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பு வீரா் பதவிகளுக்கான நேரடித் தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வாளா்கள் மற்றும் வேலை நாடுநா்கள் பயனடையும் வகையில், இந்த இலவச பயிற்சி வகுப்புகள் செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்துக்கு விண்ணப்பம் செய்தவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விவரங்களுக்கு 044 - 27426020 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்தப் பயிற்சி வகுப்பில் சேரும் இளைஞா்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com