தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி தாம்பரத்தை அடுத்த காமராஜபுரத்தில் பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு செங்கல்பட்டு பாஜக மாவட்டத் தலைவா் வேதசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநில சமூக ஊடகப் பிரிவு தலைவா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், மாவட்டப் பொருளாதார விளக்க பிரிவுத் தலைவா் ஆடிட்டா் ஆா்.எஸ்.பாலாஜி, பொதுச் செயலா் ஹரிபாபு, மகளிா் அணித் தலைவா் பொறியாளா் மாலா செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.