தாம்பரம்: சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பயணிக்க 300 மிதிவண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் ஏ.பீா்முகமது கூறினாா்.
உலக மிதிவண்டி பயன்பாடு நாள் தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் அயூப் கான் தாவூத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.