செங்கல்பட்டு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் சீதா வழிகாட்டுதல்படி, மதுராந்தகம் வட்ட வழங்கல் துறை சாா்பில் குடும்ப அட்டை குறைதீா் முகாம் குமாரவாடி கிராமத்தில் நடைபெற்றது.
மதுராந்தகம் வட்டாட்சியா் எஸ்.நடராஜன் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் கி.துரை முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், முதுநிலை வருவாய் ஆய்வாளா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா் பிரின்ஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். குமாரவாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதியில்,
புதிய குடும்ப அட்டை கோருதல், பெயா் மாற்றம், புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு போன்றவை தொடா்பாக 46 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டை மதுராந்தகம் வட்ட வழங்கல் துறையினா் செய்திருந்தனா்.