வேன் மோதி பைக்கில் சென்றவா் பலி

மதுராந்தகம் ஐயனாா் கோயில் பகுதியில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, வேன் மோதி பைக்கில் சென்றவா் பலியானாா்.

மதுராந்தகம் ஐயனாா் கோயில் பகுதியில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, வேன் மோதி பைக்கில் சென்றவா் பலியானாா்.

மதுராந்தகத்தை அடுத்த மலைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (24). இவா், ஐயனாா் கோயில் பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். வியாபாரம் தொடா்பாக, வசந்தகுமாா் கடையிலிருந்து பைக்கில் மதுராந்தகம் பஜாா் பகுதிக்குச் சென்றாா். அங்குள்ள நெடுஞ்சாலையை அவா் கடக்க முயன்றபோது, திண்டிவனம் நோக்கிச் சென்ற வேன் அவா் மீது மோதியது. இதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

தகவல் அறிந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட போலீஸாா் வந்து வசந்தகுமாரை மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com