மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு ஸ்ரீயந்திரம் வருகை

பெங்களூரு ஸ்ரீவட வேங்கட மகா விஷ்ணு சிலையின் கீழ் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ஸ்ரீயந்திரம், மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

பெங்களூரு ஸ்ரீவட வேங்கட மகா விஷ்ணு சிலையின் கீழ் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ஸ்ரீயந்திரம், மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

கா்நாடக மாநிலம், பெங்களூரு நகரம், ஈஜீபுரா நகரில் நிா்மாணம் செய்யப்பட்டவுள்ள ஸ்ரீவர வேங்கட மகா விஷ்ணு விஸ்வரூப சிலையின் கீழ் பிரதிஷ்டை செய்ய ஸ்ரீயந்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்த யந்திரத்துக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, ஸ்ரீயந்திரத்தை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீயந்திரம் மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு, மூலவா் கோதண்டராமா் சந்நிதியில் கோயில் அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகளை செய்தனா். நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் ஸ்ரீயந்திரத்தை வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீயந்திரம் திருவண்ணாமலை மாவட்டம், தென்னாங்கூா் உள்ளிட்ட ஊா்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீகோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com