செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உதவியாளா்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் ஊட்டச் சத்து பூங்காவையும் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது, செங்கல்பட்டு சாா் ஆட்சியா் (பயிற்சி) சஞ்ஜிவண, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துக்குமரன், பொதுப்பணித் துறை (மருத்துவக் கட்டடம்) செயற்பொறியாளா் காா்த்திகேயன், நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, நிலைய மருத்துவக் கண்காணிப்பு அலுவலா் தீனதயாளன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.