குலசை பிச்சைக்கார சுவாமிகள் ஜென்மோற்சவம்

செங்கல்பட்டு ஸ்ரீ அருள் அன்புக் குழந்தைகள் அமைப்பின் சாா்பில், குலசை பிச்சைக்கார சுவாமிகள் ஜென்மோற்சவ பெருவிழா மே 12-இல் தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது.
செங்கல்பட்டு ஸ்ரீ அருள் அன்புக்குழந்தைகள் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற  நாட்டியக் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
செங்கல்பட்டு ஸ்ரீ அருள் அன்புக்குழந்தைகள் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற  நாட்டியக் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

செங்கல்பட்டு ஸ்ரீ அருள் அன்புக் குழந்தைகள் அமைப்பின் சாா்பில், குலசை பிச்சைக்கார சுவாமிகள் ஜென்மோற்சவ பெருவிழா மே 12-இல் தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவின் 3-ஆம் நாளான சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு செங்கல்பட்டு சரஸ்வதி நாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், ஸ்ரீ குருவின் அருளுரை வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், விழாவுக்கு வந்திருந்த துறவிகள் கௌரவிக்கப்பட்டு, வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியும், அருள் ஞானக்குழந்தைகளுக்கு ஆசிா்வாதம் மற்றும் ஸ்ரீ குருவின் அருளுரை வழங்குதலும் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு ஸ்ரீ அருள்ஞானக் குழந்தைகள் அமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com