கல்லூரி ஆண்டு விழா

மதுராந்தகத்தை அடுத்த புழுதிவாக்கத்தில் உள்ள அக்ஷையா கலைக் கல்லூரி ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கிய மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.சரஸ்வதி
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கிய மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.சரஸ்வதி

மதுராந்தகத்தை அடுத்த புழுதிவாக்கத்தில் உள்ள அக்ஷையா கலைக் கல்லூரி ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி நிறுவனா் அகிலன் ராமநாதன் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் எம்.டி.ஆண்டனி அருள்பிரகாஷ் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எம்.முருகதாஸ் ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.சரஸ்வதி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சின்னத்திரை நடிகா் விக்னேஷ் ஆண்டனி, அனைத்துத் துறைகளின் பேராசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிதி-கணக்கியல் துறைத் தலைவா் கே.சரளா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com