செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள்கூட்டம் வியாழக்கிழமை (மே 26) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்துப் பயன்பெறலாம்.