மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிப் பகுதிகளில், மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிப் பகுதிகளில், மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி ஜெகதீஷ் நகா், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அமுதம் நகா் பகுதிகளில் மழைநீா் வடிகால் சீரமைப்பு மற்றும் வண்டலூா் ஊராட்சி குளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை ஆட்சியா் ராகுல் நாத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், துணைத் தலைவா்ஆராவமுதன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் எம்.கே.டி.காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com