செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு-ஆயத்தீா்வைத் துறை சாா்பில், போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், உதவி ஆணையா் (கலால்) லட்சுமணன் மற்றும் மாணவ, மாணவிகள் மது ஒழிப்பு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கைகளில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனா்.