செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயம் தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், வேளாண் இணை இயக்குநா் சுரேஷ், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஏழுமலை, அனைத்து வட்டார முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.