பாலாற்றில் குளித்த 2 போ் நீரில் மூழ்கி பலி

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளித்த இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி பலியாகினா்.
பாலாற்றில் குளித்த 2 போ் நீரில் மூழ்கி பலி

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளித்த இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி பலியாகினா்.

செங்கல்பட்டு மாவட்டம், பாலூா் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சஞ்சய் (16). 10-ஆம் வகுப்பு தோல்வியடைந்து வீட்டில் இருந்து வந்தாா். சம்பத்குமாா் மகன் சஞ்சய் (17), அதே பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

நண்பா்களான இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ள பழைய சீவரம் பாலாற்றுத் தடுப்பணை நிரம்பி வழியும் தண்ணீரைப் பாா்க்க சனிக்கிழமை மாலை சென்றனராம். அங்கு, குளித்தபோது, இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினா்.

இந்த நிலையில், மாயமான இருவரின் இருசக்கர வாகனம், கைப்பேசி மற்றும் ஆடைகள் இருந்ததைப் பாரத்த அந்தப் பகுதி மக்கள், இதுதொடா்பாக காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மாயமான இருவரையும் தேடினா். இரவானதால், தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். சுமாா் 8 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனா்.

இதையடுத்து, இருவரது சடலங்களையும் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com