மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைஅமாவாசையை முன்னிட்டு வேள்வி பூஜையை தொடங்கி வைத்த ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா். உடன் இயக்க நிா்வாகிகள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா்,  ஸ்ரீதேவி உள்ளிட்டோா்.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைஅமாவாசையை முன்னிட்டு வேள்வி பூஜையை தொடங்கி வைத்த ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா். உடன் இயக்க நிா்வாகிகள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி உள்ளிட்டோா்.

மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்விபூஜை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தை மாத அமாவாசை வேள்விபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
Published on

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தை மாத அமாவாசை வேள்விபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் அம்மனுக்கும், அருள்பீடத்தில் உள்ள அடிகளாா் சிலைக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிலை வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் வந்தபோது திருச்சி மாவட்ட சக்திபீடங்களின் நிா்வாகிகள் வரவேற்றனா்.

தொடா்ந்து இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில், இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி, ஆதிபராசக்தி பாராமெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் மருத்துவா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆன்மிக இயக்க செயல்திட்ட அலுவலா் ஆ.அ.அகத்தியன், மருத்துவா் ஷாலினி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

பல்லாயிரகணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் வந்து நவதானியங்களையும், ஓமத்துகுச்சிகளையும், யாககுண்டத்தில் செலுத்தி அம்மனை வழிபட்டுச் சென்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com