சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் 17-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது.

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் 17-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது.

கடந்த ஆண்டு ரூ.2,100 கோடியில் சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. அதன் பின்னர் மேற்கூரை இடிந்து விழுவதும், கண்ணாடிகள் உடைவதும் தொடர் கதையாக நடந்து வருகின்றன. இதுவரை சென்னை விமான நிலையத்தில் 16 முறைக்கும் மேலாக மேற்கூரை, கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் புதிய முனையத்தின் முதல் தளத்தில் உள்ள கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது. 30 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி கீழ்தளத்தில் விழுந்து துண்டுகளாக சிதறியது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com