மே 21-இல் கட்டுமானத்துறை விருதுகள் வழங்கும் விழா

கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள், வல்லுநர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெறவுள்ளது.
Published on
Updated on
1 min read

கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள், வல்லுநர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெறவுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் கட்டுமானத் தொழில் அகாதெமி எனும் அமைப்பு இந்திய கட்டுமானத் துறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தத் துறையில் சாதனை புரியும் கட்டுமான நிறுவனங்கள், நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள், கட்டுமானப் பொருள்கள் தயாரிப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமானப் பொறியியல்-கட்டடக்கலை மாணவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார்.
கட்டுமானத் துறையை மட்டுமின்றி மாணவர் சமூகத்தையும் ஊக்கப்படுத்தவே இந்த விழா நடத்தப்படுவதாக விழா ஒருங்கிணைப்பாளர் சிந்துபாஸ்கர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com