இணையதள மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனை மருந்து வணிகர்கள் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர்
இணையதளத்தில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு மத்தி அரசு முடிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் மே 30-ஆம் தேதி மருந்துக் கடைஅடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சுகாதாரத் துறை செயலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது குறித்து சங்கத்தின் செயலாளர் செல்வன் கூறியது: இணையதளத்தின் மூலம் போலி மருந்துகள் விற்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் போதை மருந்துகள், கருத்தடை மருந்துகள் மற்றும் ஊக்க மருந்துகளை வாங்கிட வழி வகுக்கும்.
எனவே, இணையதள மருந்து விற்பனைக்கு அனுமதி அளிக்கும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.