சென்னை, வேப்பேரியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பேரி ஈ.வெ.ரா. சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மூவரும், அரும்பாக்கம் தலைமைச் செயலக காலனி 1-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த ர.சஞ்சய் (24), அமைந்தகரை கலெக்டர் காலனி 6-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அ. முகமது தகீம் (19), எருக்கஞ்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சு.விக்னேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். விக்னேஷ், முகமது தகீம் ஆகிய இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். சஞ்சய் ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.