சென்னையில் 26 காவல் ஆய்வாளர்களை இடம் மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் ஆனந்த ஜோதி கானாத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிட்லப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணன் அதே காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நொளம்பூரில் பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி, நுங்கம்பாக்கம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். ராயலா நகரில் பணியாற்றும் ஆய்வாளர் சுப்பிரமணியன் வளசரவாக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர மேலும் 22 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.