முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை இரவு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்தார். முதல்வரின் முகாம் இல்லத்தில் இந்தச் சந்திப்பு 15 நிமிஷங்கள் நடைபெற்றது. குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவின் பெண் உதவியாளர், குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்குப் பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.