சென்னை கோட்டூர்புரத்தில் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி இறந்தார்.
கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ம.குமரேசன் (28). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அவர், அந்த குடியிருப்பின் மொட்டை மாடிக்கு தூங்குவதற்காக சென்றார். அப்போது அவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நான்காவது மாடியில் இருந்து குமரேசன் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்தக் காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.