பூந்தமல்லி கிளைச் சிறையில் கைதியிடம் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள கிளைச் சிறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 கைதிகள் உள்ளனர். இங்கு சிறைத் துறை அதிகாரி கோதண்டராமன் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டார்.
18 கைதிகள் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில், சூளைமேட்டைச் சேர்ந்த கைதி விஜய்தண்டபாணி (45) செல்லிடப்பேசி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறைத் துறை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.