குண்டர் தடுப்புச் சட்டத்தில் 8 பேர் கைது

சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
 சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
 குற்றச் செயல்களுக்காக, கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரத் (28), பாஸ்கர் (27), வியாசர்பாடி ஹரி (41), புளியந்தோப்பு அஜித் (22), அனகாபுத்தூர் கிருஷ்ணகுமார் (24), சூளைமேட்டை சேர்ந்த கார்த்திக் (25), பெருங்குடி நாகலஷ்மி (40), மயிலாப்பூர் ரவிச்சந்திரன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 8 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதைத் தடுக்கும் வகையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய தொடர்புடைய காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். அதைத் தொடர்ந்து
 சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் குற்றவாளிகள் 8 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் 8 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com