சென்னையை அடுத்த மறைமலை நகரில் மின் திருட்டில் ஈடுபட்ட 4 பேருக்கு மின் வாரியம் ரூ.18 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மின்வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மறைமலை நகர் பகுதியில் மேற்கொண்ட கூட்டு ஆய்வில் 4 இடங்களில் மின்சாரம் திருடுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தொடர்புடைய நுகர்வோருக்கு ரூ.17 லட்சத்து 36 ஆயிரத்து 263 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க ரூ.86 ஆயிரம் சமரசத் தொகை செலுத்த முன்வந்ததால் அவர்கள் மீது புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின்திருட்டு சம்பந்தமான தகவல்களை 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனத் அதில் கூறப்பட்டுள்ளது.