சென்னை விமான நிலையத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு விமான முனையப் பகுதியில் உள்ள மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் சனிக்கிழமை காலை தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து, அங்கு வந்த போலீஸார் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர்.
விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்த கவிதா என்பது தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது குறித்து விமான நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.