மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மருத்துவரின் காரை மறித்து வழிப்பறி

சென்னையில் காரில் சென்ற மருத்துவரிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :14 பிப்ரவரி 2019, 4:19 am IST


சென்னையில் காரில் சென்ற மருத்துவரிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு 5-ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ் கிருஷ்ணன். இவர், புரசைவாக்கத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். கிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து, வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அவர் சென்று கொண்டிருக்கும்போது, காரை மறித்து ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது. அதில் வந்த நபர்கள், காரை விட்டு கீழே இறங்குமாறு கிருஷ்ணனை கூறியதாகத் தெரிகிறது. 
ஆனால் கிருஷ்ணன், அங்கிருந்து காரை எடுக்க முயன்றாராம். உடனே அந்த நபர்கள், கிருஷ்ணனின் கார் கண்ணாடியை உடைத்து, அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.  இது குறித்து  ஓட்டேரி காவல் நிலையத்தில் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.