ஏ.டி.ஜி.பி. வீட்டில் திருட்டு

சென்னை அருகே மணப்பாக்கத்தில் ஏ.டி.ஜி.பி. வீட்டில் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை அருகே மணப்பாக்கத்தில் ஏ.டி.ஜி.பி. வீட்டில் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக காவல்துறையின் சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் ஏ.டி.ஜி.பி.யாக இருப்பவர் சுனில்குமார்.  இவருக்கு மணப்பாக்கம் கிருஷ்ணாநகர் 4-ஆவது பிரதான சாலையில் வீட்டுமனை உள்ளது. இங்கு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கட்டுமானப் பணிக்குரிய பொருள்கள் அனைத்தும், அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்ததாம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இங்கு அத்துமீறி நுழைந்த ஒரு நபர், அந்த அறையின் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில்   நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com