பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி முகாம்

அஞ்சல்தலை சேகரிப்பது தொடர்பான கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.  


அஞ்சல்தலை சேகரிப்பது தொடர்பான கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.  
சென்னை தலைமை அஞ்சலக அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இந்த முகாமில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் பங்கேற்கலாம். இந்த முகாமின் முதல் அணிக்கான வகுப்பு இந்த மாதம் 23- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.   தொடர்ந்து அடுத்தடுத்த அணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் மே 30 வரை வாரந்தோறும் நடைபெறும்.
இந்த கோடை வகுப்பில் சேருவதற்கு மாணவருக்கு தலா ரூ.250 கட்டணம் ஆகும். அதேசமயம்,  இந்தத் தொகைக்கு ஈடான அஞ்சல்தலை வைப்புக் கணக்கும், அஞ்சல் தலைகளும் அந்த மாணவருக்கு அளிக்கப்படும். இந்த வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க  விரும்பும் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், பெற்றோர்களும் சென்னை அண்ணாசாலையில் உள்ள அஞ்சல் சேகரிப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.  இது குறித்து மேலும் தகவல் பெற 044-2854 3199,  99529 87591,  98405 95839 என்ற தொலைபேசி எண்கள், philately.promotion@gmail.com தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகர மண்டல தலைமை அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com