தங்கம் பவுனுக்கு ரூ. 40 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.24,264-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.24,264-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.3,033-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.40.50 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.40,500 ஆகவும் இருந்தது.
 சனிக்கிழமை விலை ரூபாயில்
 (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் ............ 3,033
 1 பவுன் தங்கம் ........... 24,264
 1 கிராம் வெள்ளி .......... 40.50
 1 கிலோ வெள்ளி ........ 40,500
 வெள்ளிக்கிழமை விலை
 ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் ............. 3,028
 1 பவுன் தங்கம் ........... 24,224
 1 கிராம் வெள்ளி.......... 40.50
 1 கிலோ வெள்ளி ........ 40,500
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com