கோவை அருகே உள்ள வெள்ளிங்கிரி மலைக்கு சென்ற டிஜிபி அலுவலக ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், காந்தி நகரைச் சேர்ந்தவர் முத்து (52). இவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் இளநிலை ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர் சித்ரா பௌர்ணமியையொட்டி கோவை அருகே உள்ள வெள்ளிங்கிரி மலைக்கு தனது மகனுடன் வெள்ளிக்கிழமை சென்றார்.
ஆறாவது மலை அருகில் சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து போளுவாம் பட்டி வனத் துறையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலாந்துறை போலீஸார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.