100-க்கும் மேற்பட்ட இடங்களில் டிடிவி தினகரன் பிரசாரம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் செய்யவுள்ளார். 

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் செய்யவுள்ளார். 
இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மே 19-இல் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு அமமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரும் மே 1-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com