சென்னை ரயில்வே கோட்ட புதிய மேலாளராக பி.மகேஷ் புதன்கிழமை (ஏப்.24) பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை ரயில் கோட்டத்தின் மேலாளராக இருந்த நவீன்குலாதி, பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய மேலாளராக பி.மகேஷ் (படம்) பொறுப்பேற்று உள்ளார். இந்திய ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். தெற்கு ரயில்வே வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) உட்பட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். திருச்சியில் உள்ள பொன்மலை பணிமனை, பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் பணிமனை, அஸ்ஸாமில் உள்ள புதிய போங்கைகான் பணிமனை ஆகிய மிகச்சிறந்த மூன்று பணிமனைகளில் தலைமை பணிமனை மேலாளராக இருந்துள்ளார். இலங்கையில் ரைட்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.