சென்னை கோயம்பேட்டில் குடோனில் பதுக்கிய 2 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்பேடு புவனேஸ்வரி நகரில் உள்ள ஒரு குடோனில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோயம்பேடு போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, மூட்டை மூட்டையாக குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.
அங்கிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, குடோன் உரிமையாளரான, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (34) என்பவரை கைது செய்தனர்.