தண்டையார்பேட்டை கோட்டத்துக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ளது. தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அலுவலகம், எண். 805, டி.எச். சாலை எனும் முகவரியில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில், தண்டையார்பேட்டை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொள்ளலாம். தங்களது குறைகளைத் தெரிவித்து அவர்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.