தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆக. 20-க்குள் விண்ணப்பிக்கலாம் 

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர, ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர, ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
2019- ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்கள், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான மொத்தம் 37 ஆயிரத்து 97 இடங்களை நிரப்பிட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு மூலம் முதல்கட்ட பயிற்சியாளர்கள் சேர்க்கை நிறைவு பெற்றது.
இதன் முடிவில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 7,840 இடங்களும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 5,888 இடங்களும் காலியாக உள்ளன. 
இந்த காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்
களுக்கு 044-22501006(எக்ஸ்டென்ஷன் 210, 211, 109) என்ற எண்ணிலோ detctsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com