காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் சார்பில் நாளை பொதுக்கூட்டம்

காஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அதிகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்துள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்திய
மூர்த்தி  பவனில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், 
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com